மனநலம் பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் மாநில பெண்ணை கருணை இல்லத்தில் சேர்த்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்!

மனநலம் பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் மாநில பெண்ணை கருணை இல்லத்தில் சேர்த்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்!

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை கண்டறிந்து கருணை இல்லத்தில் சேர்த்த திருச்சி மாவட்ட காவல்துறை காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி என்ற கிராமத்தில் ஆதரவற்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த ஜார்கண்ட் மாநிலத்தை சுபத்ரா (20) என்பவரை மண்ணச்சநல்லூர் காவல் நிலைய காவலர்கள் கண்டுள்ளனர்.

Advertisement

உடனடியாக காவல்நிலைய காவலர்கள் சந்தியா, ஆனந்த், ரமேஷ் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள வேலா கருணை இல்லத்தில் சேர்த்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS