திருச்சியில் போட்டி போட்டு சென்ற பள்ளி வேன்கள் விபத்து – மாணவ, மாணவிகள், ஆசிரியர் உட்பட 8 பேர் படுகாயம்.

திருச்சியில் போட்டி போட்டு சென்ற பள்ளி வேன்கள் விபத்து – மாணவ, மாணவிகள், ஆசிரியர் உட்பட 8 பேர் படுகாயம்.

திருச்சி கே.கே நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

திருச்சி மாத்தூர், குண்டூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேன் திருச்சி விமான நிலையம் பகுதியில் திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு பள்ளி வாகனத்தை போட்டி போட்டுக் கொண்டு முந்தி செல்ல முயன்றபோது இரு வேன்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மாணவ மாணவிகள், ஆசிரியர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவ மாணவிகளை மீட்ட அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய இரண்டு பள்ளி வேன்களின் ஓட்டுநர்களை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த விபத்த குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision