ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டு பேர் என்கவுண்டர் செய்யப்படலாம்- திருச்சி நீதிமன்றத்தில் சீமான் பரபரப்பு பேட்டி

ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டு பேர் என்கவுண்டர் செய்யப்படலாம்- திருச்சி நீதிமன்றத்தில் சீமான் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் நடைபெறும் என்கவுண்டர் அனைத்தும் போலி என்கவுண்டர் திருச்சியில் சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு.DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். 

இது குறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.அந்த புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு திருச்சி DIG வருண்குமார் சார்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருண்குமார் சார்பில் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் சீமான் ஆஜராகாத காரணத்தால் நாளை ஆஜராக வேண்டும் என நீதிபதி விஜயா உத்தரவிட்டிருந்தார் அதன்படி இன்று திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார் .மீண்டும் வரும் 29ஆம் தேதி DIG வருண் குமார் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார் .

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் :-வழக்கு தொடர்பாக மீண்டும் 29ஆம் தேதி ஆஜராக உள்ளேன்.சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கான தொடர்பு தெளிவுபடுத்தப்படவில்லை.அதேபோன்று

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிலும்விசாரிக்கப்பட்ட திருச்சி சாமிரவி மற்றும் திண்டுக்கல் மோகன்ராம் ஆகியோரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுண்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல்,வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை முனைப்பு

காட்டுகிறது. யார் வேண்டுமானாலும் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும். தமிழ் எனக்கு உயிர் மூச்சு. நான் இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறேன்.தீமையை தீமையால் வெல்ல நினைக்கக் கூடாது. நன்மையால் தீமையை வெல்ல வேண்டும் என கருதுகிறேன். ஆள் மாற்றத்திற்கான அரசியலை நான் முன்னெடுக்கவில்லை.

அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்க வந்தவன் நான் ,ஆகவே வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்ற இதே நிலைப்பாடு தான். நான் பழகுவதே டிரம்ப் மற்றும் புதின் ஆகியோருடன் தான் என சிரித்தவாறு கூறினார். அமைச்சர் கே என் நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு ,தேர்தல் நேரங்களில் இதுபோன்று சோதனைகள் நடத்துவது வாடிக்கையானது.

சட்ட சட்டமன்றத்தில் எங்கு மக்கள் பிரச்சனை பற்றி பேசுகிறார்கள். தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்பதாக தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision