குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

கடந்த 26.10.2022-ம் தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடுக்கப்பட்டியில் குடிபோதையில் ஏற்பட்ட வாய்தகராறில்  பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முடுக்குப்பட்டி சேர்ந்த தர்மன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் தர்மன் கத்தியை காட்டி மிரட்டி பணம் திருடியதாக ஒரு வழக்கு  பொது அமைதிக்கு குந்தகம்  செய்ததாக இரண்டு வழக்குகள் உட்பட எட்டு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்தது  தெரிய வருகிறது.

கடந்த 29.9.2022-ம் தேதி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே உள்ள டீக்கடையில் முன் விரோதம் காரணமாக ஒருவரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பெறப்பட்ட புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டு பட்டுக்கோட்டையை சேர்ந்த அழகேசன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி குமார் என்கிற அழகேசன் மீது பல்வேறு காவல் நிலையங்கள் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வருகிறது.

எனவே தர்மராஜ் மற்றும் அழகேசன் ஆகியவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபவர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால் மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து ஆணையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO