152 கிலோ குட்கா மூட்டைகளுடன் காரில் சுற்றிய இருவர் கைது

152 கிலோ குட்கா மூட்டைகளுடன் காரில் சுற்றிய இருவர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம். ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, முக்கொம்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் Mahindra Scorpio Car-ல் சுற்றிக்கொண்டிருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், மேற்படி பகுதிக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், உத்தரவின் பேரில், தனிப்படையினர் விரைந்து சென்று சோதனை செய்தபோது, TN 01 U 9779 என்ற பதிவெண் கொண்ட Mahindra Scorpio Car-ஐ. நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களான ஹான்ஸ், விமல் மற்றும் Cool-lip போன்றவை 20 மூட்டைகளில் இருந்துள்ளது.

அதன் மொத்த எடை சுமார் 152 கிலோ. பின்பு, மேற்படி வாகனத்தில் இருந்த எதிரிகள் 1) மணிராஜ் (35) S/O.முனியாண்டி, மாரியம்மன் கோவில் தெரு, தச்சங்குறிச்சி, லால்குடி மற்றும் 2) தங்க மாயன் (54) S/O. பெரிய கருப்பன், No.5/340, வடக்கு ரங்கநாதபுரம், NGO.காலனி பாலகிருஷ்ணாபுரம், திண்டுக்கல் ஆகியோரை கைது செய்தனர்.

மேற்படி வாகனத்தையும், கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் அவர்களிடமிருந்த பணம் ரூ.96,420/- பறிமுதல் செய்யப்பட்டு ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision