போதை மாத்திரை விற்பனை செய்து கொடுக்கும்படி வாலிபரை தாக்கிய இரண்டு ரவுடிகள் கைது

போதை மாத்திரை விற்பனை செய்து கொடுக்கும்படி வாலிபரை தாக்கிய இரண்டு ரவுடிகள் கைது

திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜய் (27). இவரை காட்டூர் அண்ணா நகர் அன்னதாசன் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி (26), வடக்கு காட்டூர் சப்பாணி கோயில் தெருவை சேர்ந்த பிரபு (29) இவர்கள் இருவர் மீதும் ரவுடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் விஜயை அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்து கொடுக்கும்படி கூறி வற்புறுத்தி உள்ளனர். அதற்கு விஜய் மறுக்கவும் அவரை வீதி வடங்கம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இது சம்பந்தமாக விஜய் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து பாண்டி மற்றும் பிரபு ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvison

https://www.threads.net/@trichy_vision