திருச்சி மாநகராட்சி பகுதிகளில் (26.09.2021) நாளை 162 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் (26.09.2021) நாளை 162 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் 26.09.2021 அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது ய.  இதனைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கீழ்குறிப்பிட்டுள்ள 162 இடங்களில் 26.09.2021 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.


மேற்காணும் பட்டியல் www.trichycorporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதுநாள்வரை கொரோனா தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசியினை போட்டு நோயிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினர்ரையும் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn