திருச்சியில் (17.11.2022) அன்று வாகனம் பொது ஏலம்

திருச்சியில் (17.11.2022) அன்று வாகனம் பொது ஏலம்

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் (Ambassador Car - LMV) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வருகின்ற (17.11.2022)-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் (12.11.2022) முதல் (16.11.2022)-ம் தேதி காலை 10:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனத்தை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (17.11.2022)-ம் தேதி காலை 08:00 மணி முதல் 10:00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி நான்கு சக்கர வாகனத்திற்கு 18% GST முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரானா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO