விசிக அலுவலகம் மர்ம நபர்களால் சூறை-கட்சியினர் சாலை மறியல் பரபரப்பு

விசிக அலுவலகம் மர்ம நபர்களால் சூறை-கட்சியினர் சாலை மறியல் பரபரப்பு

விடுதலை சிறுத்தை கட்சியின்  திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை சில மர்ம நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கி உள்ளனர். தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறிஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து அலுவலகத்தை அடித்து சூறையாடிய மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலுவலகத்தை அடித்து சூறையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ராஜா என்பவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision