திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்து நெரித்து கொலை

திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்து நெரித்து  கொலை

திருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் ராதா. இவர் வீட்டில் ஒரு பெண்மணி இருந்துள்ளார். நேற்று இவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து நகைகள் 4 சவரன் திருடு போய் உள்ளது. இவரது மகன் ரஜினி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடன் இருந்த பெண்ணை காணவில்லை தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்து நான்கு சவரன் நகை திருடப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ராதா மகன் ரஜினி தனியாக அவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தந்தை இறந்த பிறகு தாய் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி அந்த பெண் அவரிடம் பேசி கொலை செய்து அவருடைய நகைகள் செயின் ,தோடு, வளையல் உள்ளிட்ட நகைகள் நான்கு சவரன் திருடி சென்றுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

     

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn