திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி பேராட்டம்.

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி பேராட்டம்.

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட முசிறி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், துறையூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 12 இடங்களில் இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ், ஸ்ரீரங்கம் பகுதி கழகச் செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட அதிமுகலர் பலர் பங்கேற்றனர்.  இதே போன்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக லால்குடி ஒன்றியம் சார்பில் பூவாளூர் பேரூராட்சி அலுவலம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பேரூர் கழகம் மற்றும் பாலகிருஷ்ணா பட்டி பேரூராட்சியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் அண்ணா சிலை முன்பும் பாலகிருஷ்ணம்பட்டி பகுதியில் பேரூராட்சி அலுவலகம் முன்பும் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு பேரூர் கழக செயலாளர்கள் ராஜாங்கம் மற்றும் ராஜேந்திரன் தலைமை வகித்தனர் நிகழ்ச்சியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, அறிவழகன், விஜய், வழக்கறிஞர் ராமசாமி, வழக்கறிஞர் செயலாளர் அன்பு, பிரபாகரன், மைவிழி அன்பரசன், கலியபெருமாள், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், வினோத், வாய்தா ராஜேந்திரன், நாட்டாமை சுப்பிரமணி, கமல், லட்சுமி மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் தலைமையில், திருச்சி லால்குடி நகராட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவரம்பூர், லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 11 இடங்களில் இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது. திருச்சி லால்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.எம் பாலன், ஒன்றிய செயலாளர் அசோகன், நகர செயலாளர் பொன்னி சேகர், அவை தலைவர் அருணகிரி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ், பாசறை மாவட்ட செயலாளர் வி.டி.எம் அருண் நேரு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision