சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவை தரும் - திருச்சியில் பாரிவேந்தர் பேட்டி!!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவை தரும் - திருச்சியில் பாரிவேந்தர் பேட்டி!!

Advertisement

பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமை உரை ஆற்ற வந்த இந்திய ஜனநாய கட்சியின் மாநில தலைவரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

Advertisement

அப்போது பேசிய அவர் பயிர்கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு "தூண்டியும் செய்யாமல் இருப்பது தவறு - தூண்டியதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி, தூண்டப்பட்ட பிறகு செய்யாமல் இருந்தால் அது அதை விட தவறு, அதை செய்து இருக்கிறார் அதற்காக நன்றி.

இந்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவை தரும், நல்ல மாற்றத்தை தரும். அரசியல் மாற்றம் நடந்தே தீரும், நல்ல பல திட்டங்களை கொடுக்கும். இது நான் மட்டும் அல்ல நாட்டு மக்களும் நினைக்கிறார்கள்" என்றார்.

Advertisement

Advertisement