திருச்சி உறையூர் குங்குமவல்லி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு

திருச்சி உறையூர் குங்குமவல்லி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு

ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்மனுக்கு உகந்த நாள் ஆகும். ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும். வளை காப்புக்கு வளையல்கள் வாங்கி கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

திருச்சி உறையூர் குங்குமவல்லி அம்மனுக்கு வளைகாப்பு நாயகி என்று இன்னொரு பெயரும் உண்டு. அம்மனுக்கு வளையல் அணிவித்து வேண்டினால் திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி பூரத்தை முன்னிட்டு குங்குமவல்லி அம்மனுக்கு வளையல் சாற்றும் வைபவம் இன்று நடைபெற்றது. இதில் அம்மனுக்கு வளையல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து கோவில்களில் ஆடிப்பூரமான இன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் இன்றி வளைகாப்பு விழா நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn