திருச்சியில் 4 நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

திருச்சியில் 4 நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் -  வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டனர். பின்னர் இது புரளி என்று தெரிய வந்தாலும். காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

 இந்நிலையில் இன்று திருச்சியில் உள்ள பிரீஸ் ஹோட்டல், கோர்ட் யார்ட், திலகவதி, கண்ணப்பா போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 4 ஹோட்டல்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision