திருச்சியில் பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டம்:

திருச்சியில் பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டம்:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் இன்றும் திருச்சியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்திய மாணவர் சங்கம்

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மாணவர்கள் இன்று ரயில்வே நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் அதிகாரம்

மேலும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் காவல்துறையினரின் தடையை மீறி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு பேரணியை நடத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
செய்யப்பட்டனர்.