சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் - சாலையில் தர்ணா போராட்டம் நடத்திய மாணாக்கர்கள்

சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் - சாலையில் தர்ணா போராட்டம் நடத்திய மாணாக்கர்கள்

திருச்சி மாவட்டத்தில் மிகவும் அதிகமாக விபத்து நடக்கக்கூடிய சாலையாக தொடர்ந்து உள்ளது பால் பண்ணை முதல் தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலை. திருச்சி பழைய பால்பண்ணை இருந்து தஞ்சாவூர் மாவட்டத்தை இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆக சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கக்கூடிய இடமானது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும், சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளும், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளும் அமைந்து உள்ளது. அரியமங்கலம் பழைய பால் பண்ணை முதல் தஞ்சாவூர் வரை செல்லும் நெடுஞ்சாலையை அமைக்கும் பொழுது சர்வீஸ் சாலை அமைக்காமல் நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக இருந்த காரணத்தினால் தினந்தோறும் நூற்றுக்கும் ஏற்பட்ட விபத்துகளும், 20க்கும் மேற்பட்ட உயிர் பலிகளும் ஏற்பட்டுகிறது.

இதைத் தொடர்ந்து காட்டூர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய கல்லூரியின் மாணவன் ஒருவன் இரு தினங்களுக்கு முன்பு இந்த நெடுஞ்சாலையை கடந்த பொழுது விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பலமுறை அதிகாரியிடம் கல்லூரிக்கு முன்பு பேருந்து நிறுத்தம் சிக்னல் வைக்க வேண்டும் எனவும், மாணவர்கள் கல்லூரிக்கு வந்து போகும் நேரங்களில் ஒரு போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இன்று கல்லூரி மாணவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். எனவே மாணவனுக்கு உரிய நீதி வேண்டும் என்றும், மாணவன் மருத்து செலவினை தமிழக அரசே முழுமையாக ஏற்ற வேண்டும் எனவும், மாணவர்கள் பல நாள் கோரிக்கையாக முன்வைத்த போக்குவரத்து சிக்னல் வசதி மற்றும் கல்லூரி நேரங்களில் அவ்விடத்திற்கு ஒரு போக்குவரத்து காவலரை நியமித்திட கோரியும், முக்கியமான சங்கம் யூடிசி கல்லூரியின் கிளை சார்பில் இன்று 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

UDC கல்லூரி கிளைத்தலைவர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சூர்யா மாவட்ட செயலாளர் ஜி.கே.மோகன் கிளை செயலாளர் ஹரி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision