வரி உயர்வை கண்டித்து திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வரி உயர்வை கண்டித்து திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வீட்டு வரி உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக, புதிய தமிழகம் உட்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா, பெரம்பலூர் பார்வையாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கௌதம், சீனிவாசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO