ஏமாற்றமளிக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம்! ஏஐடியுசி கருத்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் ஏஐடியுசி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது. போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு நேற்று 29 ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒப்பந்த பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஏ ஐ டி யு சி உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்கள் 15 சதவீதம் ஊதிய உயர்வு வலியுறுத்திய நிலையில் 6% சத உயர்வு என்பது ஏமாற்றம் அளிக்கிறது.பேச்சுவார்த்தை முடிவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்து ஏஐடியுசி, சிஐடியு,டிடிஎஸ்எப். கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் முன் வைத்துள்ள கோரிக்கைகளில்
கடந்த 01.09.2023 முதல் ஒப்பந்தம் அமல்படுத்தி,நிலுவைத் தொகை வழங்க வேண்டும் ஆனால் ஓராண்டு கழித்து 01.09.2024 முதல் பணியில் உள்ளவர்களுக்கு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்பதும், நான்கு தவணைகளில் நிலுவைத்தொகை வழங்கப்படும் என்பதும், மூன்றாண்டு ஒப்பந்தம் நான்காண்டு ஆகி மேலும் ஒரு வருடம் கழித்து ஒப்பந்தம் அமல்படுத்துவது, நிலுவைத் தொகை வழங்குவது என்பதும் எதிர்பார்ப்பில் இருந்த போக்குவரத்து தொழிலாளர்களை மேலும் வஞ்சிப்பதாகும்.
கடந்த 14 வது ஒப்பந்தத்தில்2.57 காரணி மற்றும் பே மேட்ரிக்ஸ் போட்ட பின்பும் சீனியர் ஜூனியர் சம்பள வித்தியாசம் உள்ளது.சரி செய்து 15 %ஊதிய உயர்வு கோரினோம். அதன் பின்னர்தான் அரசு மற்றும் மின்வாரிய பணியாளர்களை போன்று ஏழாவது ஊதிய குழு சம்பள நிலைக்கு உயரமுடியும். அது மறுக்கப்பட்டது. 6% ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அரசின் கீழ் செயல்படும் துறைகளுக்குள் பாகுபாடு கூடாது என நாம் வலியுறுத்தியது ஏற்கப்படவில்லை.
ஓய்வூதியர்களுக்கான பண பலன் 2023 ஜூலை முதல் நிலுவையில் உள்ளது. எப்போது வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது ஆனால் ஓய்வூதியர்களின் பணப்பலன்கள் கிடைப்பது தொடர்பாக எந்த விதமான அறிவிப்பும் இல்லை. ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பின்பு 119 சதவிகிதம் 194 % ஆகவும் 52% நிலுவை உள்ள நிலையிலும், 2016 க்கு பின்பு ஓய்வு பெற்றவர்களுக்கு 5 சதவீதத்திலிருந்து 30% ஆக உயர்த்திய பின்பு 25% நிலுவை உள்ள
நிலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு வழங்கிடவும் அதற்கான உத்தரவாதம் அளிக்க வேண்டுமென கேட்டதும்,ஓய்வூதியத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹3050 -ல் இருந்து (சம்பள நிலை மாறியுள்ள நிலையில் ஆரம்ப நிலை சம்பளம் ₹15700 அதில் 50 சதவீதம் )₹7850/- நிர்ணயம் செய்திட வேண்டும் எனவும், அரசு மற்றும் மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு ஆரம்ப நிலை ஓய்வூதியம் ₹9000/- உள்ளது என வலியுறுத்தப்பட்டதும் ஏற்கப்படவில்லை. கடந்த 1/4/2023 க்கு பிறகு பணியில்
சேர்ந்தவர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் CPS ல். சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். அதிமுக ஆட்சியின் போது நிறுத்தப்பட்டுள்ள பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும், அவர்களை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கும் படி கேட்டோம். அரசின் நிலைப்பாட்டை பொறுத்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்கள். உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
வாரிசு வேலை கல்வித் தகுதியின் அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் மட்டுமல்லாது தொழில்நுட்பம் மற்றும் அலுவலக பணிகளில் நியமனம் செய்திட வேண்டும் எனக் கூறியும் ஏற்கப்பட வில்லை. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் வரவு செலவு பற்றாக்குறை ₹6228.75 கோடி முழுமையாக ஈடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டோம். 2000 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் படிப்படியாக ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து கழகங்கள் செயல்படுவதில் தொடர்ந்து நெருக்கடியான சூழ்நிலை தொடரும் நிலையில் அரசு நிதி உதவி குறித்து நம்பகமான அறிவிப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரியது ஒட்டுமொத்தத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்தம் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிப்பதால் ஏஐடியுசி, சிஐடியு,டிடிஎஸ்எப் கூட்டமைப்பு சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை என்று ஏஐடியுசி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision