சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத முதிர்கன்னிகள் ஆகியோரை தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள்

நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ததிட உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் 14 வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வரும் 05 மற்றும் 10 ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் கீழ்க்காணும் ஆவணங்களுடன் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத முதிர்கன்னிகள் மற்றும் ஆதரவற்ற மகளிர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது விபரங்களை

www.tnwidowwelfareboard.tn.gov.in

இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தேவையான ஆவணங்கள் : பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டைநகல், விதவை சான்று/கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று நகல், குடும்ப அட்டை நகல், அலைபேசி எண் (OTP காரணமாக)

மேற்காணும் ஆவணங்களுடன் நல வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் ஆதரவற்ற மகளிர் தங்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற அடிப்படை தேவைகளை பெற்று சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்வதற்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சுயதொழில் தொழங்குவதற்கு வங்கி கடன் பெறுவதற்கு உரிய வழிகாட்டுதல்

பெறுவதற்கும் மேற்காணும் முகாமில் பதிவு செய்ய தங்களது பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவகங்களில் (Union Office)ல் 05.06.2025 மற்றும் 10.06.2025 ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து அரசின் நலத்திட்டங்கள் பெற்று பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்கள் அறிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision