துறையூர் அருகே 50 ஆண்டுகால புளியமரம் தீ வைத்த மர்ம நபர்கள்

துறையூர் அருகே 50 ஆண்டுகால புளியமரம் தீ வைத்த மர்ம நபர்கள்-சமூக விரோதிகளின் கூடாரமான ஏரிக்கரையை மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் நீர் ஆதாரமாக விளங்குவது பெரிய ஏரிக்கரை இந்த பெரிய ஏரிக்கரை சுமார் 580 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
ஏரிக்கரை சுற்றிலும் சுமார் 50 ஆண்டு கால பழமையான புளிய மரங்கள் அமைந்துள்ளன.இந்நிலையில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் புளிய மரங்களையும் ஏரிக்கரையில் உள்ள ஒரு சில பச்சை மரங்களையும் மது போதையில் நெருப்பு வைத்து அழித்துக் கொண்டுள்ளனர்..
இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் துறையூரின் நீர் ஆதாரமாக விளங்கும் பெரிய ஏரிக்கரையில் மரங்களும் அழிந்து வருகின்றன.இந்நிலையில் இன்று 50 ஆண்டுகால பழமையாக புளிய மரத்தில் சில மது பிரியர்கள் நெருப்பு வைத்ததால் கொழுந்து விட்டு எறிந்த புளிய மரத்தினை கண்ட சில சமூக ஆர்வலர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்த ஒரு சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்தில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பாலச்சந்தர் தலைமையிலான வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பசுமை மிக்க பழங்கால புளிய மரத்தினை தண்ணீர் வீச்சு அடித்து மேற்கொண்டு தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்..
இதனால் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பெரிய ஏரிக்கரையில் சமூக விரோதிகளின் நடமாடத்தை கட்டுப்படுத்தி இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறா வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision