திருச்சியில் காவலர்களுக்கு நேரில் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருச்சியில் காவலர்களுக்கு நேரில் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தீபாவளி பண்டிகை நாளை (04.11.2021) கொண்டாடப்பட உள்ள நிலையில், குற்றச் சம்பவங்கள் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் நிம்மதியாக கொண்டாட தங்கள் குடும்பத்தினர் மறந்து பண்டிகை காலங்களில் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முசிரி, துறையூர், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், சோமரசம்பேட்டை உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பணியில் இருக்கும் காவலர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision