திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்...!!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்...!!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு சுங்கத்துறை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு ஆண் பயணியை பிடித்து சோதனை செய்தனர். அதில் அமெரிக்க டாலர் 6000, இந்தியப் பணம் 5.50 லட்சம் மற்றும் மலேசிய ரிங்கிட் 1100 என மொத்தம் ரூ.10.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision