29 வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

29 வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கடந்த 28.5.2022 ஆம் தேதி சத்திரம் பேருந்து நிலையத்தில் நாகநாதர் டீக்கடை அருகில் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 2000 பணத்தை கொள்ளை அடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் எதிரி மணிகண்டன் என்ற ஆட்டோ பாலு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி மணிகண்டன் என்ற ஆட்டோ பாலு முன்விரோதத்தில் கொலை முயற்சி செய்த 4 வழக்குகளும், ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்ததாக 18 வழக்குகளும் உட்பட 29 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே எதிரி மணிகண்டன் என்கின்ற ஆட்டோ பாலு என்பவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் கொள்ளை அடிப்பதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதால்

மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார் அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு ஆய்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO