ஒரு கிலோமீட்டர் தூரம் பிரேக் பிடிக்காமல் வந்த அரசு டவுன் பஸ் எம்ஜிஆர் ரவுண்டானாவில் மோதியது பதட்டம் பயணிகள் ஓட்டம்

ஒரு கிலோமீட்டர் தூரம் பிரேக் பிடிக்காமல் வந்த அரசு டவுன் பஸ் எம்ஜிஆர் ரவுண்டானாவில் மோதியது பதட்டம் பயணிகள்  ஓட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற TN 45 N 3534 என்ற அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாடு இழந்து எம்ஜிஆர் சிலை கிரவுண்டானாவில் மோதி நின்றது. பதட்டத்தில் பயணிகள் இறங்கி ஓடியும் முன்னே அமர்ந்திருந்த பெண் பயணிகள் ஐந்து பேருக்கு சிறு காயமும் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை பகுதியில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி முத்தரையர் சிலையிலிருந்து பிரேக் பிடிக்கவில்லை என ஓட்டுனர் சகாய சவுரிமுத்து கூச்சலிட்டதால் பயணிகள் பதட்டம் அடைந்தனர் .ஒரு கிலோ மீட்டர் தூரம் சாதுரியமாக யார் மீதும் மோதாமல் பேருந்தை ஒட்டி வந்து எம்ஜிஆர் ரவுண்டானவில் மோதி நிறுத்தினார்.

போக்குவரத்து காவல்துறையினர் வாகன நெரிசலை சீர்செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO