நான்கு நாட்களில்,1,804 பேர் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்:

நான்கு நாட்களில்,1,804 பேர் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்:

உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி பதவி இடங்களுக்கு, நான்கு நாட்களில், 1,804 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Advertisement

மாவட்டம் முழுவதும் முதல் மூன்று நாட்களில், 1,002 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 12 பேரும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 145 பேரும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு, 643 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த நான்கு நாட்களில் மொத்தம், 1,804 பேர் உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.