ஜமால் கல்லூரியில் தடுப்பூசி ஆராய்ச்சி மைய ஆய்வகத் திறப்பு விழா

ஜமால் கல்லூரியில் தடுப்பூசி ஆராய்ச்சி மைய ஆய்வகத் திறப்பு விழா

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில், ஜமால் தடுப்பூசி ஆராய்ச்சி மைய ஆய்வகத் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முதல்வர் முனைவர் டி.ஐ.ஜார்ஜ் அமலரத்தினம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக, அமெரிக்கவிலுள்ள அட்லாண்டா எமோரி பல்கலைக்கழகத்தின் எமோரி தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தின், ஆய்வகத் திட்ட இயக்குநர் முனைவர் அப்துல் ஜப்பார் கலந்துகொண்டு ஜமால் தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எமோரி பல்கலைக்கழக எமோரி தடுப்பூசி ஆராய்ச்சி மையத்துடன்-ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய அதி நவீன ஆய்வகம், வட அமெரிக்காவின் ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவியோடு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பங்களிப்புத் தொகை சேர்த்து, கிட்டத்தட்ட (ரூ.30,00,000) முப்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. 

மேலும், ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறையைச் சேர்ந்த உமர் ஷெரீப் ஜவஹர் என்ற ஆராய்ச்சி மாணவர், கடந்த ஜனவரி மாதம் முதல் 6 மாத கால பயிற்சியாக, எமோரி பல்கலைக்கழக எமோரி தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வகத்தின் முக்கிய நோக்கமே, தற்போதுள்ள புதிய புதிய நுண்ணுயிர் தொற்றுகளுக்குண்டான தடுப்பூசியைக் கண்டுபிடித்து பொதுமக்களுக்கும், மத்திய-மாநில அரசுகளுக்கும் உதவிகரமாக இருந்து, நுண்ணுயிர் தொற்று இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது என ஆய்வக ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான முனைவர் சாதிக் புகாரி தெரிவித்தார். 

இதில், கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஹாஜி ஜமால் முகமது, துணைச்செயலாளர் முனைவர் அப்துஸ் சமது, நிர்வாகக்குழு உறுப்பினரும் கௌரவ இயக்குநருமான அப்துல்காதர் நிஹால், ஆய்வகத்தின் கௌரவ ஆலோசகர் முனைவர் அக்பர்ஷா, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஜாகிர் உசேன், கூடுதல் துணை முதல்வர் முனைவர் இசாக் அஹமது, மற்றொரு கூடுதல் துணை முதல்வர் முனைவர் ஹாஜா முகைதீன், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் ஜோசப் ஆண்டனி ஜெரால்டு அனைவரையும் வரவேற்று, சிறப்பு விருந்தினரையும் அறிமுகப்படுத்தினார். நிறைவாக, ஆய்வக துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் முகமது உசேன் நன்றி கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision