லால்குடி சப்தரீஷீஸ்வரர் கோயில் தேர்கால் நடும்விழா

லால்குடி சப்தரீஷீஸ்வரர் கோயில் தேர்கால் நடும்விழா

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் பெருவிழாவில் ஐந்து தேர்களின் தேரோட்ட விழா மற்றும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா ஆகியவை வரும் ஏப்ரல் 3- ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர் கால் நடும் விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருத்தவத்துறை என்கிற  லால்குடியில் அமைந்துள்ளது இக் கோயில்.  ஏழு முனிவருக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்று இத் தலத்திற்கு திருத்தவத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் பங்குனித் திருவிழாவின் ஒன்பதாம் நாள் சுவாமி எழுந்தருள கலை நயமிக்க 75 அடி உயரம் உள்ள மிகப் பழமையான மரத்தாலான திருத்தேர் 1918ம் ஆண்டு செய்யப்பட்டது. இத்தேரின் திருவீதியுலா கடந்த 1936 ம் ஆண்டுக்குப் பின் 75 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர் புதுபிக்கப்பட்டு 2011 ம் ஆண்டு முதல் பங்குனி பெருவிழாவின் ஒன்பதாம் நாளில் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டில் வரும் மார்ச் 26 ம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 3 ம் தேதி தேரோட்டம் விழாவும் நடைபெறுகிறது. இதற்கான தேர் கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி  பெருந்துறை பிராட்டியார் உடனுரை சப்தரிஷீஸ்வரர் சுவாமிகளுக்கு பூஜைகள் மற்றும் முகூர்த்தகால் பூஜைகள் செய்து, கோயிலிருந்து

கோயில்  செயல் அலுவலர் ம.நித்யா தலைமையில், கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் முறைக்காரர்கள் , பக்தர்கள்  எடுத்துச் சென்று தேரில் தேர்கால் நடப்பட்டது.  இதனையொட்டி தேரோட்ட கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.

விழாவில் கோயிலின் குருக்கள் தேஜா குருக்கள், லால்குடி நகராட்சி தலைவர் துரை, நகராட்சி ஆணையர் குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் டி.என்.டி. நடேசன்,கோயில்பணியாளர்கள், கோயில் முறைக்காரர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn