கல்லூரி மாணவர்கள் மெகா ரத்த தான முகாம்

கல்லூரி மாணவர்கள் மெகா ரத்த தான முகாம்

எம்.ஏ.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் (என்எஸ்எஸ்) பிரிவு மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் (ஒய்ஆர்சி) இணைந்து மெகா ரத்த தான முகாம் நடத்தியது.  MAMCET முதல்வர் Dr சூசன்கிறிஸ்டினா நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

டாக்டர்.முருகானந்தம், பதிவாளர் மற்றும் டாக்டர்.எஸ்.ராஜசேகரன், டீன்/ ஜி.ஐ. ஆகியோர் ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, ரத்தத்தை தேவைப்படுபவர்களுக்கு வழங்க மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

Nssஇன் துணை முதல்வர் மற்றும் திட்ட அலுவலர் டாக்டர் ஜி.ஹரிதாஸ் மற்றும் ஒய்ஆர்சி திட்ட அலுவலர் டாக்டர் வி.ரெத்தினகிரி ஆகியோர் முகாமை ஏற்பாடு செய்தனர். திருச்சியில் உள்ள "உயிர் துளி" இரத்த வங்கிக்கு ஜி. ஜெரால்ட் பீட்டர் ஜாரெட், நன்கொடையாளர் ஆலோசகர் தலைமையில் மாணவர் தன்னார்வலர்களால் சுமார் 100 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO