மணப்பாறை அருகே குடும்ப தகராறில் மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

மணப்பாறை அருகே குடும்ப தகராறில் மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே சின்னக்கோன்களத்துப்பட்டியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பால்சாமி. இவருக்கு சத்யபிரியா (25) என்ற மனைவியும், 6, 4 மற்றும் 1 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆன நிலையில், கணவன் – மனைவிக்கிடையே அவ்வப்போது குடும்ப தகராறு நடந்து வரும்.

இந்நிலையில் வழக்கம் போல் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனவேதனையில் இருந்த சத்யபிரியா வீட்டில் கட்டடப்பணிக்கு பயன்படுத்தப்படும் இராசயன மருந்தை குழந்தைகளுக்கும் கொடுத்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நால்வரும் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை புத்தாநத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr