தொட்டியம் - லாலா பேட்டை இடையே காவிரி ஆற்றில் புதிய தடுப்பணை - பாரிவேந்தர் வாக்குறுதி

தொட்டியம் - லாலா பேட்டை இடையே காவிரி ஆற்றில் புதிய தடுப்பணை - பாரிவேந்தர் வாக்குறுதி

பெரம்பலூர் நாடாளுமன்ற பா.ஜனதா கூட்டணியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பா பாரிவேந்தர் நேற்று தொட்டியம், ஏலூர்பட்டி, காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்த வேனில் சுற்றுப்பயணம் செய்து தாமரை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசினார். அப்போது, அவர் பேசுகையில்.... கடந்த தேர்தலில் என்னை வெற்றிபெற செய்தீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். அரியலூர், பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல் வரை ரெயில்வே திட்டத்தை கொண்டுவர முழு முயற்சி மேற்கொண்டுள்ளேன். மீண்டும் என்னை தேர்வு செய்தால், நிச்சயமாக இந்த ரெயில்வே திட்டத்தை நிறைவேற்றுவேன்.

தடுப்பணை தொட்டியம் தாலுகாவில் உள்ள முள்ளிப்பாடி ஏரிக்கு காவிரி ஆற்றில் இருந்து நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுப்பேன். காவிரி ஆற்றின் குறுக்கே தொட்டியம் - லாலா பேட்டை இடையே புதிய தடுப்பணை கட்டி நீராதாரம் உயர்வதற்கு நடவடிக்கை உயர் எடுக்கப்படும். தொட்டியத்தில் வாழைப்பழத்தை மதிப்புகூட்டி விற்பனை செய்ய தொழிற்சாலை கொண்டுவரப்படும். எனவே எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

முன்னதாகவேட்பாளர் பாரிவேந்தர் தொட்டியம், முசிறியில் இந்திய ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, செயலாளர் ஜெயசீலன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கருணாகரன், பா.ஜனதா பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் லோகிதாசன், மாவட்ட துணை தலைவர் மணி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision