பொது இடம் ஆக்கிரமிப்பு - வார்டு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

பொது இடம் ஆக்கிரமிப்பு - வார்டு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருச்சி ராமச்சந்திரன் நகர் எடமலைபட்டி புதூர் 39-வது வார்டு டோபி காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள பொது இடத்தை சிலர் ஆக்கிரமித்ததாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

39-வது வார்டுக்குட்பட்ட டோபி காலனி தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட குடிநீர் குழாய் உடற்பயிற்சிக்கூடம் சமுதாயக் கூடம் அமைக்க இருந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், 

மேலும் அப்பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் 100 அடி கொடிக்கம்பம் தமுமுகவினர் நிறுவ இருப்பதால் அதையும் தடுத்து நிறுத்துமாறு பொது இடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm