ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் சித்திரைத் தேரோட்டம்

ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நம்பெருமாள் அருள்பாலித்தார்

விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழாவானது ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 28ம்தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது. அதன் பின்னர் கற்பக விருட்சகம், யாளி, கருட, ஹனுமந்த, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்தார். இதனை தொடர்ந்து ஏழாம் திருநாளான இம்மாதம் 4ம் தேதி நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் சித்திரை வீதிகளில் வலம் வந்த அவர் தயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சம் கண்டருளிய அவர் மீண்டும் மூலஸ்தானம் வந்தடைந்தார். எட்டாம் திருநாளான நேற்று அவர் தங்ககுதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்;பெருமாள் மேஷ லக்கனப்படி அதிகாலை 5.15 மணிக்கு திருதேரில் எழுந்தருளப் பண்ணினார். காலை 6.00. மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருதேரின் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு முக்கிய வீதிகளை திருத்தேர் வலம் வந்தது. ரெங்கா ரெங்கா என்று தரிசித்த பக்தர்களுக்கு திருத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் அருள்பாலித்தார்.

 

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளுர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision