குற்ற வழக்குகளில் துரிதமாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு

குற்ற வழக்குகளில் துரிதமாகவும், சிறப்பாகவும் செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு

திருச்சி, பாலக்கரை, கீழப்புதூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் என்பவரை கடந்த 09.05.2021 அன்று இரவு ஹீபர் ரோட்டில் முன்பகை காரணமாக 7 நபர்கள் அரிவாள் மற்றும் பெரிய கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது தொடர்பான அமர்வு நீதிமன்ற காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் தலைமறைவான 7 எதிரிகளையும், திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரப்படி தனிப்படை உதவி ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணி செல்வம், தலைமை காவலர்கள் சரவணன், ஜானி, இனுஸ்டின், கெல்லர் ஜேக்கப், தனசேகரன் மற்றும் சவுக்கத் அலி ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு கைது செய்யவும், அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தவும் உதவியாக இருந்துள்ளார்கள்.

மேலும், கடந்த 08.05.2021 அன்று பிரனவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை ஊழியர் மார்டின் ஜெயராஜ் சுமார் 1½ கிலோ நகைகளை பெற்றுக் கொண்டு சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் வழியில் மர்ம நபர்கள் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது தொடர்பான உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் முக்கிய எதிரிகள் 7 பேரையும் குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் உமா சங்கரி தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர்கள், மாதவன், செபஸ்டின், தலைமை காவலர் விஜயராஜ் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் துரிதமாக செயல்பட்டு 12 மணி நேரத்திற்குள் கைது செய்யவும், அவர்களிடமிருந்து வழக்கின் சொத்தான சுமார் 1½ கிலோ தங்க நகைகள், கொலைக்கு பயன்படுத்திய ஆயதங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை கைப்பற்றவும் உதவியாக இருந்துள்ளார்கள்.

இவ்விரு வழக்குகளிலும் சிறப்பாக செயல்பட்ட மேற்கண்ட இரண்டு தனிப்படையினரைத்  திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி பணிப்பாராட்டு சான்று மற்றும் பண வெகுமதி வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd