பிரேதத்தை கொண்டு செல்லுவதில் பிரச்சினை - இலவச அமரர் ஊர்தி வாகனம் கண்ணாடி உடைப்பு ஓட்டுநர் மீது தாக்குதல்

பிரேதத்தை கொண்டு செல்லுவதில் பிரச்சினை - இலவச அமரர் ஊர்தி வாகனம் கண்ணாடி உடைப்பு ஓட்டுநர் மீது தாக்குதல்

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (35). கார் ஓட்டுநர்கள் வேலை செய்து வந்த இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று (31.01.2021) சாந்தகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இன்று சாந்தகுமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் சாந்தகுமாரின் சொந்த ஊரான லால்குடிக்கு உடலைக் கொண்டு செல்வதற்காக இலவச அமரர் ஊர்தியில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது நீதிமன்றம் அருகே வந்தபோது சாந்தகுமாரின் உறவினர்கள் உறையூர் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என இலவச அமரர் ஊர்தி ஓட்டுனர் சதீஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரமடைந்த சாந்தகுமாரின் உறவினர்கள் அமரர் ஊர்தி வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஓட்டுனர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதுப்பற்றி தகவலறிந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் நீதிமன்றம் அருகே ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி இந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision