ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து திருச்சியில் அனைத்து இஸ்லாமிய சார்பில் கண்டன போராட்டம்

ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து திருச்சியில் அனைத்து இஸ்லாமிய சார்பில் கண்டன போராட்டம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணிவதை  தடை விதித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள்

மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் ஹிஜாப் அணிவதை கர்நாடக நீதிமன்றம் தடையை கண்டித்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் துணை ஒருங்கிணைப்பாளர் ஹஸ்ஸான் பைஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கர்நாடகாவின் உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமியருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை கண்டித்து கோஷமிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO