ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரம் - பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரம் - பக்தர்கள் தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த (22.12.2022)ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதில் இன்று மோகினி அலங்காரம் எனும் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சி தந்தார்.

மூலஸ்தானத்திலிருந்து இன்று காலை 6.30மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் (பெண் வேடம்) நம்பெருமாள் புறப்பட்டு வந்தார். இன்று மாலை 4.30 மணி வரை அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பின்னர் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக் கொட்டார பிரகாரம் வழியாக கருட மண்டபத்தில் நம்பெருமாள் வீற்றிருப்பார். அதையடுத்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைவார்.

நாளை (02.01.2023) அதிகாலை 3.30 நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு  செய்யப்பட்டு 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கடந்து செல்வார்.

ஸ்ரீரங்கத்திற்கு லட்சக்கணக்கான கணக்கான பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னிட்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வருகிற 12-ஆம் தேதி 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்தில் முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடுமுறை மாவட்ட பிரதீப் குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn