திருச்சி ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து மழைநீர் - பயணிகள் அவதி!

திருச்சி ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து மழைநீர் - பயணிகள் அவதி!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து மழை நீர் விழுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Advertisement

திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தின் பயணிகள் நடைமேடை மேற்கூரையில் இருந்து மழைநீர் ஓட்டையின் வழியே விழுந்தது.

இதனால் ரயிலில் பயணிக்க காத்திருந்த பயணிகள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement