போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம்  இடமாற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம்  இடமாற்றம்

திருச்சி மாநகர் மாவட்டம் கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர் பகுதியில் உள்ள CSI மிஷின் மருத்துவமனை அருகில் சாலையின் வளைவில் உள்ள மின் கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனால் பலமுறை விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பலமுறை பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே பொது மக்களின் வேண்டுதலுக்கிணங்க இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக EB அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. தற்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு மின்கம்பம் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn