நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருச்சி மாநகராட்சி செவ்வாய்க்கிழமை சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை தொடங்கியது. பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக உள்ள உள்கட்டமைப்புகள் குறித்து பாதுகாப்பு தணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு வாரங்கள் ஆகிறது.

சட்ட விரோதமாக கூடுதல் இடத்தை ஆக்கிரமித்து, பாதசாரிகளுக்கு, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையூறாக இருந்த 7 கடைகள் அகற்றப்பட்டன. செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகம் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை கனரக இயந்திரங்கள் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.

"கடைகள் தங்கள் தளத்தை விரிவுபடுத்தியதால், பொதுமக்கள் நடந்துசெல்ல சிரமத்திற்கு ஆளாகினர். அடுத்த சில வாரங்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது,” என மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆக்கிமிப்புகள் அகற்றப்பட்ட இடங்கள் பாதசாரிகளுக்கான தளமாகப் பயன்படுத்தப்படும். 

சின்னக்கடைதெருக்கள் விரைவில் இதேபோன்ற இயக்கங்களுக்கு உட்படும், உள்ளூர் அமைப்பு மேலும் கூறியது.இதற்கிடையில், மாநகராட்சியால் வழங்கப்பட்ட பெட்டிக்கடைகளை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒரு பகுதி வியாபாரிகள் தங்கள் கடைகளைத் தொடர மாற்று இடம் தேடினர். "விற்பனையாளர்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்தால் நாங்கள் பரிசீலிப்போம். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ”என்று அதிகாரி மேலும் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO