ஆடு மேய்க்க சென்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற ஓய்வுபெற்ற வனக்காப்பாளர் – காவல்துறையினர் விசாரணை!

ஆடு மேய்க்க சென்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற ஓய்வுபெற்ற வனக்காப்பாளர் – காவல்துறையினர் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செட்டி பட்டியில் ஆடு மேய்க்க சென்ற செல்வி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு அவருடைய சின்ன மாமனார் ஆறுமுகம் (63) என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

மேலும் கூச்சலிட்ட அப்பெண்ணை தாக்கியுள்ளார். இதனால் மயக்கமடைந்த செல்வி தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததை அடுத்து ஆறுமுகம் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.