ரோட்டோ எக்ஸ்போ 2024 - குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த அமைச்சர்

ரோட்டோ எக்ஸ்போ 2024 - குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த அமைச்சர்

திருச்சி ரோட்டரி மாவட்டம் 3000 திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ் இணைந்து நடத்தும் ரோட்டோ எக்ஸ்போ 2024 அமைச்சர் கே.என். நேரு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் சிறப்பு விருந்தினராக கோவிந்தராஜுலு வணிக சங்கத் தலைவர் கோவிந்தராஜூலு, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையை இயக்குனர் டாக்டர் பிரதீபா மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு, கவர்னர் ஆனந்த ஜோதி ரோட்டரி சங்கத் மற்றும் வருங்கால ரோட்டரி கவர்னர்கள் ராஜா கோவிந்தசாமி 2024 to 2025

ஜே கார்த்திக் 2025 முதல் 2026 ஆர் பி எஸ் மணி 2026 முதல் 2027 வரை ரொட்டேரியன் மின்னல் சரவணன், ரொட்டேரியன் எஸ் பி சுப்பிரமணியன், ரொட்டேரியன் பர்ஸானா, ரொட்டேரியன் கேசவன், ரொட்டேரியன் முகமது தாஜ், ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த எக்ஸ்போவின் முக்கிய நிகழ்வாக அரசு பள்ளியில் பெண்களுக்கு கழிப்பறை கட்டும் நோக்கத்தின் நிதி திரட்டும் முயற்சியில் ரோட்டரி சங்கமும், ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தினர்.இந்த எக்ஸ்போ இன்று தொடங்கி ஜூன் 1 மற்றும் 2ம் தேதி வரை நடக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision