சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.62.43 லட்சம் உண்டியல் காணிக்கை!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.62.43 லட்சம் உண்டியல் காணிக்கை!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம்.

Advertisement

கடந்த 11ம் தேதி எண்ணப்பட்ட நிலையில் மீண்டும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டது. இதில் 62 லட்சத்து 43 ஆயிரத்து 512 ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் கணக்கிடப்பட்டன. 

Advertisement

கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நேற்று மொத்தம் 18 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பின் முடிவில் உண்டியலில் ரொக்கமாக 62 லட்சத்து 43 ஆயிரத்து 512 ரூபாய், 1 கிலோ 457 கிராம் தங்க நகைகள், 1 கிலோ 950 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 44 இருந்தன.