வருகின்ற 28ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை சாத்தப்படும் - இணை ஆணையர்!

வருகின்ற 28ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை சாத்தப்படும் - இணை ஆணையர்!

சமயபுரம் மாரியம்மன் கோவில் 28ம் தேதி நடை சாத்தப்படும் என இணை ஆணையர் அசோக்குமார் அறிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தினமும் அதிகாலை 05.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுவது நடைமுறையில் உள்ளது. 

Advertisement

வருகின்ற 28ம் தேதி மாலை 3 மணியளவில் கொள்ளிடம் வட காவிரியில் சமயபுரம் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருளல் நடைபெறுவதால் அன்றைய தினம் மாலை 03.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மறுநாள் 29ஆம் தேதி காலை 05.30 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என்று இணை ஆணையர் அசோக்குமார் அறிவித்துள்ளார்.