திருச்சி பால்பண்ணை அருகே புகையிலை பொருட்கள் விற்ற உணவு வணிகத்திற்கு சீல்

திருச்சி பால்பண்ணை அருகே  புகையிலை பொருட்கள் விற்ற உணவு வணிகத்திற்கு சீல்

திருச்சிராப்பள்ளி, பால்பண்ணையில் உள்ள ARP ஸ்டால் என்ற கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் செந்தில்குமார்  அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் நேற்று 18.05.2022 புதன்கிழமை அந்த கடை சீல் செய்யப்பட்டது.

திருச்சி பால்பண்ணையில் இயங்கிவந்த ARP டீ ஸ்டால் கடையில் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

25.10.2021 அன்று முதல் ஆய்வில் அவரது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அவர் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் 28.04.2022 அன்று ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அன்றைய தினமான 29.04.2022 அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் P.செந்தில்குமார் IAS அவர்கள் 16.05.2022-ல் அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த வணிக கடை 18.05.2022 கடை சீல் செய்யப்பட்டது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO