ராணி மங்கம்மாள் சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க கோரிக்கை-தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர்

 ராணி மங்கம்மாள் சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க கோரிக்கை-தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர்

திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி பிரச்சனைக்கு தீர்வு காண தேசிய நெடுஞ்சாலைத்துறை ராணி மங்கம்மாள் சாலையை விரிவுபடுத்த வேண்டும்.10-06-2025,அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில்,கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜோதிமணி,மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள்அ. சௌந்தர பாண்டியன்,எம். பழனியாண்டி,வணக்கத்திற்குரிய திருச்சிமாவட்ட ஆட்சித் தலைவர்,மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறையின் அரசு அலுவலர்கள் பங்கேற்றுள்ளார்கள்.கூட்டத்தில் பங்கேற்ற மாண்புமிகு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அன்றாடம் விபத்துகளை ஏற்ப்படுத்தி வரும் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பரசரம் பேட்டை - பெட்டவாய்த்தலைவரை சாலையை

 விரிவுபடுத்தும் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்கள்,வணக்கத்திற்குரிய திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருச்சி கரூர் இடையே பசுமைவழிச் சாலை அமைப்பது தொடர்பாக புதிய திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாரிக்க வேண்டும் எனவலியுறுத்துள்ளார்கள்.திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் பேசும்போது திருச்சி கரூர் இடையே காவிரி கரையோரம் சாலை விரிவுபடுத்துவதில் உள்ள சிக்கல்களை கூறியுள்ளார்கள்.இச் சாலையை விரிவு படுத்துவதில் உள்ள பிரச்சனைகளையும்

 இச்சாலைக்கு மாற்றாக திருச்சி திண்டுக்கல் சாலையிலிருந்து கருமண்டபம், அல்லித்துறை,அதவத்தூர் ,எட்டரை ஒத்தக்கடை,கோப்பு,கரூர் மாவட்டம் .முதலைப்பட்டி,மேட்டுக்காடு,குறிச்சி,நங்கவரம், பெட்டவாய்த்தலை நார்மில்,ஆரியம்பட்டி,கோட்டைமேடு,கீழ குட்டப்பட்டி, பில ள்ளாபாளையம்,வழியாக திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரூர்மாவட்டம் மனவாசி அருகே முடக்கு சாலையில் இணையயும் ராணி மங்கம்மாள் சாலையை நான்கு வழிச்சாலையாக அமைத்து தர வேண்டுமென வணக்கத்திற்குரிய மாண்புமிகு குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அவர்களும்,திருச்சி மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கம் தொடர்ந்து தமிழக அரசுக்கும்,திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கையாக வைத்து வருகிறோம்.

  ராணி மங்கம்மாள் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதன் மூலம் தற்போது திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு மற்றும் ஸ்ரீரங்கம்,குளித்தலை,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகள் வளர்ச்சிக்கும் பெரும் பயனாக இருக்கும்.மேலும் வணக்கத்திற்குரிய திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டு இருப்பது போல திருச்சி கரூர் இடையே பசுமை வழி சாலை அமைப்பதற்கான ஏற்ற பகுதியாகவும் இருக்கும் 

  எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ராணி மங்கம்மாள் சாலையை கவனத்தில் எடுத்துக் கொண்டு நான்கு வழிச்சாலையாக அமைத்துக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.அயிலை சிவசூரியன்,மாநில பொருளாளர் ,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்- கோரிக்கை வைத்துள்ளார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision