உலக சுற்றுச்சூழல் தினம்- ரோட்டரி சங்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினம்-  ரோட்டரி சங்கத்தின் சார்பாக  மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக ஸ்ரீயது குல சங்கம் நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் Rtn.சேஷாத்திரி, செயலாளர் Rtn. அறிவழகன், திட்டத்தின் தலைவர் மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn. அசோக் குமார், ரோட்டரி கிளப்

ஆப் ராயல் சிட்டி பிரைடின் செயலாளர் Rtn. விக்னேஸ்வரன் மற்றும் Bee ஸ்டுடியோவின் நிறுவனர் திரு. பரத் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ரங்கசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களிடம் வழங்கினர். 

நூற்று ஐம்பது மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.பள்ளியின் தாளாளர்  டாக்டர் ரங்கசாமி  அவர்கள் இந்த சேவையை திருச்சியில் இருக்கிற அனைத்து ரோட்டரி சங்கங்களும் தொடர்ந்து செய்யுமாறு அன்போடு கோரிக்கை விடுத்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision