ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தற்காலிக புறக்காவல் நிலையம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தற்காலிக புறக்காவல் நிலையம்

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளை (22.12.2022) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் உள்பிரகாரத்தில் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் இன்று திறந்து வைத்து, சிசிடிவி செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பகல் பத்து இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO