திருச்சியில் வீட்டின் ஓட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை - 50 ஆயிரம் பணம், நகை கொள்ளை!!

திருச்சியில் வீட்டின் ஓட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை - 50 ஆயிரம் பணம், நகை  கொள்ளை!!

Advertisement

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மில் காலனி 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமன் (60) திருமணமாகாத இவர் தனது தாயார் அமுதவல்லி உடன் அங்கு ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக வாசன் நகரில் உள்ள தனது தம்பி சந்திரசேகரன் வீட்டிற்கு விசேஷத்திற்கு சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், பீரோவின் உள்ளறையில் வைக்கப்பட்டு இருந்த 50 ஆயிரம் பணம், ஒரு பவுன் மோதிரம்,அரை பவுன் தங்க தோடு திருடு போனதை அடுத்து உடனடியாக எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Advertisement

இதனையடுத்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement