திருச்சி அம்மா மண்டபம் மூடப்பட்டது!

திருச்சி அம்மா மண்டபம் மூடப்பட்டது!

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக அதிக மக்கள் கூடியதாலும், தனிமனித இடைவெளி கேள்விக்குறியானதாலும், தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் இன்று திருச்சி அம்மா மண்டபம் மூடப்பட்டது.

திதி கொடுக்க வருபவர்கள் அருகருகே அமர்வதும், முக கவசம் அணியாமல் இருந்ததால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாமண்டபம் திறக்கப்பட்டு மூத்தவர்களுக்கு திதி கொடுக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தனிமனித இடைவெளி கேள்விக்குறியானதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.