திருச்சியில் முதல்வர் மாற்று வாகனம் மர்மநபர்களால் சேதம் - காவல்துறை விசாரணை!!

திருச்சியில் முதல்வர் மாற்று வாகனம் மர்மநபர்களால் சேதம் - காவல்துறை விசாரணை!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்களாக திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் சோமரசம்பேட்டை மணப்பாறை , திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு விட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரகனேரி பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக ஒரு சிறிய மேடை போடப்பட்டு இருந்தது .

Advertisement

அதற்கு முன்னதாக முத்தரையர் சங்க தலைவர் விஸ்வநாதன் வீட்டிற்க்கு முன் வரவேற்பு செய்திருந்தனர்.முதல்வர் அதை கண்டுகொள்ளாமல் தாண்டி சென்றதால் அவருக்கு வைத்திருந்த மாற்று வாகனத்தை (முதல்வர் கார்) அடித்து விஸ்வநாதன் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a